Archive for October, 2009
புதுமைப் புரட்சிக்கு வித்திட்ட லினக்ஸ் கருத்தரங்கு

சேலத்தில் லினக்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு கோலாகலமாக நடைபெற்றது. இணையம் தொடர்பான சேவைகளை வழங்கிவரும் விஷுவல் மீடியா நிறுவனமும், சென்னை லிமேசன் டெக்னாலஜிஸ் மற்றும் தமிழ் செய்தித்தளமான சங்கமம்லைவ்.காம் இணைந்து இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இக்கருத்தரங்கில் திரு.ராமதாசன் அவர்கள் கட்டற்ற மென்பொருளை பயன்படுத்துவதன் நோக்கம் மற்றும் பயன்கள், உபுண்டு லினக்ஸ் பயன்கள், பயன்படுத்தும் முறை மற்றும் மென்பொருட்களை நிறுவும் முறை போன்றவற்றையும், திரு.கனகராஜ் அவர்கள் லினக்ஸ்சை நிறுவும் முறைப் பற்றி பார்வையாளர்களுக்கு எடுத்துரைத்தார்.

பின் உணவு இடைவேளைக்குப் பிறகு கோவை கே.ஜி லினக்ஸ் சொல்யூசன் நிறுவனத்தினர் அவர்களின் நிறுவனத்தில் மைக்ரோசாப்ட் -ன அதிரடி சோதனைப் பற்றியும் பின்னர் அதிலிருந்து படிப்படியாக விண்டோசையும் லினக்சையும்
தின் கிளையன்ட்(THIN CLIENT) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செலவினைகளை குறைத்தது எவ்வாறு என்பது பற்றியும் பகிர்ந்துகொண்டார். மேலும் சென்னை மாப்டெக் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் பல்க் SMS மற்றும் சிறு நிறுவனங்களுக்கான மின்னஞ்சல் மேலாண்மை மென்பொருட்களையும் பற்றியும் விளக்கப்பட்டது.

அப்போது உபுண்டு லினக்சின் நோக்கம் என்ன, மேலும் அவற்றில் உள்ள நிறுவனங்களுக்கான ட்ரைவர்கள் கிடைக்கவில்லை என்று எடுத்துரைத்தனர். இக்கேள்விகளுக்கு ராமதாசன் அவர்கள் பதிலளித்தார். மேலும் இன்னொரு பார்வையாளர் ஏற்கனவே ரெட்ஹாட் போன்றவை பணம் கட்டித்தான் வாங்கவேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாளை உபுண்டுவும் அப்படி மாறாது என்பதற்கு என்ன உறுதி என்று கேட்டு அதிரவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக விரிவுரையாளர்கள் திரு.காமாட்சி மற்றும் கல்பனா சேக்கிழார், மற்றும் மருத்துவர் சேக்கிழார் , பாரத் பாலிடெக்னிக்கல்லூரி விரிவுரையாளர்கள் , மேட்டூர் அனல்மின்நிலைய ஊழியர்கள், சேலத்தில் உள்ள வணிக வரி அலுவலர்கள், நாகரத்தினம் பொறியியல் கல்லூரியின் சேர்மன் டாக்டர். சந்திரமோகன்,மற்றும் சேலத்த்தை சுற்றியுள்ள கல்லூரிகளில் இருந்து பெரும்பாலனோர் கலந்துகொண்டனர். கல்லூரிகளில் தற்போது பருவத்தேர்வுகள் நடைப்பெற்று வருவதால் மாணவர்கள் கலந்துகொள்ள இயலாதா சூழ்நிலையில் அவர்களின் சார்பில் அவர்களின் விரிவுரையாளர்கள் கலந்துகொண்டது குறிப்பிட்டத்தக்கது. மேலும் பள்ளி மாணவ, மாணவியர்களும் கலந்துகொண்டு கேள்விகள் கேட்டது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.மேலும் இக்கருத்தரங்கு குறித்து பார்வையாளர்களிடம் கருத்து கேட்டபோது அனைவரும் இக்கருத்தரங்குகள் மேலும் மேலும் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
லினக்ஸ் இயங்குதளம் குறித்த விழிப்புணர்வு அனைவரிடைய பரவலாக இருந்து வருகிறது என்றாலும் அதனை பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்க இதுபோன்ற கருத்தரங்குகள் தேவை
கற்றலுக்கான கட்டற்ற மென்பொருள்கள் – அறிவியல் நகரம், சென்னை
சென்னை அக்டோபர் 20, “கற்றலுக்கான கட்டற்ற மென்பொருள்கள்” எனும் கருப்பொருள் கொண்ட பள்ளி மாணவர்களுக்கான கட்டற்ற மென்பொருள் அறிமுகப் பயிற்சி, சென்னை அறிவியல் நகரத்தில் நடைபெற்றது. சென்னையிலுள்ள ஆறு பள்ளிகளைச் சார்ந்த அறுபது மாணவர்கள் இந்நிகழ்ச்சியால் பயனடைந்தனர். காலை முப்பது
மாணவர்கள் மாலை முப்பது மாணவர்கள் என பயிற்சியின் பாங்கு அமைந்திருந்தது.
கலந்து கொண்ட மாணவர்களுக்கு கட்டற்ற மென்பொருள் பற்றிய அறிமுகம், வேதியியல், இயற்பியல் கணிதம்,
ஆங்கிலம் ஆகிய பாடங்கள் கற்பதற்குத் துணை புரியும் கட்டற்ற மென்பொருள்கள் சில விளக்கப்பட்டு, அவற்றை அவர்களே செய்து பார்ப்பதற்கான வாய்ப்பும் அளிக்கப்பட்டது. கணினி வழி தமிழ் அறிமுகமும் தட்டச்சுப் பயிற்சியும்
வழங்கப்பட்டது. மாணவர்களோடு பள்ளி ஆசிரியர்களும் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்நிகழ்ச்சியினை தமிழ்நாடு வானவியல் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் பி. தேவதாஸ்
தொடங்கிவைத்தார். அறிவியல் நகரத்தின் துணைத்தலைவர் முனைவர் பி. ஐயம்பெருமாள் தொடக்கவுரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியினை மாணவர்களுக்காக இந்திய லினக்ஸ் பயனர் குழு சென்னை & NRCFOSS-AU வின் பாரதி சுப்பிரமணியம் & ஸ்ரீ ராமதாஸ், உபுண்டு தமிழ்க் குழும தொடர்பாளர் தங்கமணி அருண் ஆகியோர் நடத்தினர்.
பி.கு:
நிகழ்ச்சியினை நடத்திட வேண்டி பள்ளிகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேற்கொண்டு உதவிய அறிவியல் நகரத்தின் அலுவலர் ஹேமா,
நிகழ்ச்சிக்கு மடிக்கணினிகள் தேவைப்பட்ட போது தங்களது மடிக்கணினியை தந்துதவிய இந்திய லினக்ஸ் பயனர் குழு, சென்னையின் சௌமியா கிருஷ்ணன், இராஜேஷ்,
நிகழ்ச்சி குறித்த தங்கள் அலோசனைகளை வழங்கிய இந்திய லினக்ஸ் பயனர் குழு, சென்னையின் பி. இராமன், தியாகு
ஆகியோருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கலந்து கொண்ட பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட உபுண்டு இயங்குதள வட்டு உள்ளிட்ட ஆவணங்களின் தயாரிப்பிற்கான வளங்களை வழங்கிய கட்டற்ற திறந்த மூல மென்பொருள் வளத்திற்கான தேசிய மையம்,
நிகழ்ச்சியினை நடத்திட வேண்டி அணுகிய போது அனுமதி தந்து ஊக்கமளித்து உதவிய அறிவியல் நகரத்தின் செயற்குழுவின், தலைவர் பேராசிரியர் எம். ஆனந்தகிருஷ்ணன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இனி தட்டுத் தடுமாறாமல் தட்டச்சு செய்யலாம்
இனி உபுண்டுவிலும் தட்டுதடுமாறாமல் தட்டச்சு செய்யலாம். அதற்கான தீர்வுதான் IOK(Indic Onscreen Keyboard). ஏனென்றால் இயல்பிருப்பாக பெடோராவில் மட்டுமே IOK இருக்கிறது. மேலும் IOKவானது rpm பொதியாக மட்டுமே கிடைக்க பெற்று வந்தது. நான் அதன் மூல நிரலை எடுத்து உபுண்டுவில் நிறுவக்கூடிய debபொதியாக மாற்றியுள்ளேன். IOK பற்றிய சிறு வரையறை மற்றும் அதை உங்கள் கணிணியில் நிறுவுவது பற்றியும் கீழே காணலாம்.
IOK(Indic Onscreen Keyboard)
தற்போது கீழ்காணும் மொழிகளின் இன்ஸ்கிரிப்ட் கீ மேப்புகளை IOK-யில் காணலாம்
- அஸ்ஸாமி
- பெங்காலி
- குஜராத்தி
- ஹிந்தி
- கன்னடம்
- மராத்தி
- மலையாளம்
- பஞ்சாபி
- ஒரியா
- சிந்தி
- தமிழ்
- தெலுங்கு
IOK -யில் இருக்கும் பட்டியல் பெட்டியின்(drop down list) மூலம் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொழிகளில் நமக்கு தேவையான மொழியை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த பட்டியல் பெட்டியில் வரும் மொழிகளானது அவரவர் கணிணியில் /usr/share/m17n/ என்ற அடைவினுள் இருக்கும் இன்ஸ்கிரிப்ட் கீ மேப்புகளை பொறுத்ததாகும். பின்னர் நீங்கள் IOK-யில் இருக்கும் பொத்தான்களை க்ளிக் செய்வதன் மூலம் அதை இயக்கலாம். இது நீங்கள் தேர்வு செய்த மொழியின் எழுத்துருக்களை காட்டுவதோடு மட்டுமில்லாமல், நீங்கள் க்ளிக் செய்யும் எழுத்துருவை அப்போது பயன்பாட்டில் உள்ள மற்றொரு விண்டோவில் பதியவும் செய்யும்.
IOK-யின் மற்றொரு செயல்பாடு என்னவெனில் இயல்பிருப்பாக இருக்கும் இன்ஸ்கிரிப்ட் கீ மேப்புகளை நம் தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
இத்தகு பயன்பாடுகள் நிறைந்தIOK(Indic Onscreen Keyboard) பொதியை உங்கள் கணிணியில்(உபுண்டு இயங்குதளத்தில்) நிறுவுவது எப்படி என்பதை பார்ப்போம்.
உங்கள் கணிணியில்
System->Administration->Software Sources என்பதில்
Third-Party Software என்பதை தேர்வு செய்யவும். பின்னர் Add என்ற பொத்தானை க்ளிக் செய்யவும். பின்னர் ஒரு குறுந்திரை தோன்றும், அதில் APT line: என்பதில் பின்வரும் வரியை உள்ளிடவும்.
deb http://ppa.launchpad.net/suji87-msc/ppa/ubuntu karmic main
பிறகு close என்ற பொத்தானை க்ளிக் செய்யதவுடன் தோன்றும் திரையில் Reload என்பதை க்ளிக் செய்யவும்.
பின்வரும் வழிமுறையை பயன்படுத்தி IOK-வை உங்கள் கணிணியில் நிறுவலாம்
-
Synaptic Package Manager
System → Administration → Synaptic Package Manager
சென்று iok என்பதை வலது க்ளிக் செய்துMark for installation என்பதை தேர்வு செய்யவும். பின்னர் Apply என்பதை க்ளிக் செய்தவுடன் IOK உங்கள் கணிணியில் நிறுவ பட்டுவிடும்.
எடுத்துக்காட்டு:









