Archive for the ‘விழிப்புணர்வு’ tag
புதுமைப் புரட்சிக்கு வித்திட்ட லினக்ஸ் கருத்தரங்கு

சேலத்தில் லினக்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு கோலாகலமாக நடைபெற்றது. இணையம் தொடர்பான சேவைகளை வழங்கிவரும் விஷுவல் மீடியா நிறுவனமும், சென்னை லிமேசன் டெக்னாலஜிஸ் மற்றும் தமிழ் செய்தித்தளமான சங்கமம்லைவ்.காம் இணைந்து இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இக்கருத்தரங்கில் திரு.ராமதாசன் அவர்கள் கட்டற்ற மென்பொருளை பயன்படுத்துவதன் நோக்கம் மற்றும் பயன்கள், உபுண்டு லினக்ஸ் பயன்கள், பயன்படுத்தும் முறை மற்றும் மென்பொருட்களை நிறுவும் முறை போன்றவற்றையும், திரு.கனகராஜ் அவர்கள் லினக்ஸ்சை நிறுவும் முறைப் பற்றி பார்வையாளர்களுக்கு எடுத்துரைத்தார்.

பின் உணவு இடைவேளைக்குப் பிறகு கோவை கே.ஜி லினக்ஸ் சொல்யூசன் நிறுவனத்தினர் அவர்களின் நிறுவனத்தில் மைக்ரோசாப்ட் -ன அதிரடி சோதனைப் பற்றியும் பின்னர் அதிலிருந்து படிப்படியாக விண்டோசையும் லினக்சையும்
தின் கிளையன்ட்(THIN CLIENT) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செலவினைகளை குறைத்தது எவ்வாறு என்பது பற்றியும் பகிர்ந்துகொண்டார். மேலும் சென்னை மாப்டெக் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் பல்க் SMS மற்றும் சிறு நிறுவனங்களுக்கான மின்னஞ்சல் மேலாண்மை மென்பொருட்களையும் பற்றியும் விளக்கப்பட்டது.

அப்போது உபுண்டு லினக்சின் நோக்கம் என்ன, மேலும் அவற்றில் உள்ள நிறுவனங்களுக்கான ட்ரைவர்கள் கிடைக்கவில்லை என்று எடுத்துரைத்தனர். இக்கேள்விகளுக்கு ராமதாசன் அவர்கள் பதிலளித்தார். மேலும் இன்னொரு பார்வையாளர் ஏற்கனவே ரெட்ஹாட் போன்றவை பணம் கட்டித்தான் வாங்கவேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாளை உபுண்டுவும் அப்படி மாறாது என்பதற்கு என்ன உறுதி என்று கேட்டு அதிரவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக விரிவுரையாளர்கள் திரு.காமாட்சி மற்றும் கல்பனா சேக்கிழார், மற்றும் மருத்துவர் சேக்கிழார் , பாரத் பாலிடெக்னிக்கல்லூரி விரிவுரையாளர்கள் , மேட்டூர் அனல்மின்நிலைய ஊழியர்கள், சேலத்தில் உள்ள வணிக வரி அலுவலர்கள், நாகரத்தினம் பொறியியல் கல்லூரியின் சேர்மன் டாக்டர். சந்திரமோகன்,மற்றும் சேலத்த்தை சுற்றியுள்ள கல்லூரிகளில் இருந்து பெரும்பாலனோர் கலந்துகொண்டனர். கல்லூரிகளில் தற்போது பருவத்தேர்வுகள் நடைப்பெற்று வருவதால் மாணவர்கள் கலந்துகொள்ள இயலாதா சூழ்நிலையில் அவர்களின் சார்பில் அவர்களின் விரிவுரையாளர்கள் கலந்துகொண்டது குறிப்பிட்டத்தக்கது. மேலும் பள்ளி மாணவ, மாணவியர்களும் கலந்துகொண்டு கேள்விகள் கேட்டது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.மேலும் இக்கருத்தரங்கு குறித்து பார்வையாளர்களிடம் கருத்து கேட்டபோது அனைவரும் இக்கருத்தரங்குகள் மேலும் மேலும் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
லினக்ஸ் இயங்குதளம் குறித்த விழிப்புணர்வு அனைவரிடைய பரவலாக இருந்து வருகிறது என்றாலும் அதனை பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்க இதுபோன்ற கருத்தரங்குகள் தேவை
ஆக்ஸிஸ் வங்கிக்கு ஆயிரக்கணக்கில் மடல் அனுப்புங்கள்…
ஆக்ஸிஸ் வங்கியில் தங்களுக்கு கணக்கு இருந்து அதன் இணையச் சேவையை பயன்படுத்துகிறீர்களா?
அது மைக்ரோசாப்டுக்கு ஏற்றதாக அதன் உலாவிக்குத் தக்கபடிதான் இருக்கப் போவதாக சொல்கிறது(1).
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்த கப்பம் கட்டி விண்டோஸின் லைசன்ஸ் முறைப்படி பெற்றிருக்க வேண்டும். அதாவது ஐயாயிரம் ரூபாய் குறைந்தது காசு பிடிக்கும் அல்லது பைரேட் செய்து பிழைக்க வேண்டும்.
இந்நிலை மாற வேண்டும்.
பொதுப் பயன்பாட்டு சேவைகள் வழங்கும் தளங்கள் யாவும் உலாவி பாரபட்சமின்றி வடிவமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். எனவே ஆக்ஸிஸ் வங்கியை அதன் தளத்தை பொதுவான நெறிமுறைகளுக்கு இணங்கி – பயர்பாக்ஸ் போன்ற உலாவிக்கும் ஏற்றபடி – குனு லினக்ஸ் பயன்படுத்துவோருக்கு ஏதுவாக இருக்க வேண்டுமென்று ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: ibrm@axisbank.com
(1) – http://www.axisbank.com
பி.கு: இவையெல்லாம் தமிழில் எப்போது கிடைக்கப் போகின்றன? அதையும் கேட்போமா?
